தமிழகத்தில் உள்ள ஒரு முக்கியமான ஆன்மிக நகரம் திருவண்ணாமலை. அக்னி மலையின் பின்னணியில் இருக்கும் அந்த புனித நகரத்தை தூரத்திலிருந்து பார்க்கும்போதே அதன் அழகு நம்மை சுண்டி இழுக்கிறது. கார்த்திகை தீபத்தின் தீபம் ஏற்றப்படும் அக்னி மலையில் ஏறுவது ஒரு இதமான அனுபவம். அப்படி ஏறும் போது மலை உச்சியிலிருந்து திருவண்ணாமலையையும், அண்ணாமலையார் ஆலயத்தையும் தரிசிப்பது சொர்க்கத்தை பார்த்த திருப்தியைத் தரும். சமீபத்தில் நானும் நண்பர்கள் சிலரும் திருவண்ணாமலைக்கும், அதன் அருகிலுள்ள செஞ்சி கோட்டைக்கும் சென்றிருந்தோம். அப்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை தமிழ் இணைய நண்பர்கள் முன் சமர்பிக்கின்றேன்
Wednesday, January 10, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment